Wednesday, 27 May 2015

நின்ற மரம்

கல் தடுக்கி விழுந்தபோது
கண்டுகொள்வாரில்லை
கனவுகள் கலைந்தபோது 
நீயோ நிழலோ உடனிருந்ததில்லை
அவ்வப்போது நிறைந்த வலியில்
நின்று விடும் என்ற பயத்தில்
பேரிரைச்சலாய் எழும்பிய 
இதயத்தின் ஒலிக்கும் 
எதிர்திசையின் எந்த எதிரொலியுமில்லை,
வழியும் இது குருதியோ வியர்வையோவென,
களைப்பின் மயக்கத்தில்,
பற்றிச் சாய்ந்ததோ  ஒரு மாமரத்தடி,
பூத்து  உதிர்த்து காய்க்கும் மும்முரத்திலும்
மெலிதாய் வீசிய காற்றின் வழி 
பூக்கள் தூவி இமைகள் வருடி
இதம் தந்தது, நீண்டிருந்த அம்மரம்,
நின்ற மரமாய் நின்றிருந்த
மனிதர்களுக்கிடையே!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...