Tuesday 19 May 2015

மரண அறிவிப்பு!

 
அது
அவளுக்கோ இல்லை அவனுக்கோ?
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை!

அம்மா பால் மறுத்த பொழுதா,
தொட்டிலில் ஆதரவற்றுக்  கிடத்திய பொழுதா,
பள்ளி என்பது கனவாகிய பொழுதா,
வேலை இல்லாத  வறுமையின் பொழுதா,
காதல் தோல்வியுற்றப்  பொழுதா,
கடன் கழுத்தை நெரித்த பொழுதா,
அந்தத் துரோகத்தின் பொழுதா,
என்றோ நேர்கொண்ட வன்முறையின் பொழுதா,
அவ்வப்போது சந்தித்த தோல்விகளின் பொழுதா,
நேற்று கடந்த யுகத்தின் பொழுதா,
இன்று கடந்த அவமானத்தின் பொழுதா???

எப்பொழுதோ எப்படியோ நிகழ்ந்துவிடும்
அவரவர் சந்தித்த அந்த மரணத்தின் பொழுதுகள்,
எப்போது நிகழ்ந்ததென்று யாருக்கும் தெரியவில்லை!
எனினும் மரணம் என்ற அறிவிப்பில்
இன்று கிடத்தப்பட்டிருக்கும்
இந்த உடலின் பொருட்டே
 என் கண்ணீர்! 
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!