Friday 31 May 2013

நிதர்சனம் பழகு

நிதர்சனம் பழகு
--------------------------
அவசரத்துக்கு உதவாத செல்வமும்
துயரத்துக்கு உதவாத நட்பும்
பசிக்கும் போது கிடைக்காத உணவும்
கண்ணீரை துடைக்காத உறவும்
துவள்கையில் தேற்றிடாத கருணையும்
சூல் பொய்த்துக்  கலையும் மேகங்கள் போல
மனப்பிம்பம் உடைத்து நிதர்சனம் உணர்த்திச் செல்லும் -
சில வேளைகளில்
உயிர் கொன்று வாய்க்கரிசியும் இட்டுச் செல்லும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!