திரைக்காட்சியில்
காணும் சித்திகரிக்கப்பட்ட துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று
பரிதாபப்படும் நமக்கு வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல்
ஒருபோதும் கேட்பதேயில்லை!
--------------------
இப்படி
வெயில் கொளுத்துகிறது என்று குறைப்பட்ட அம்மாவிடம் சொன்னேன், வெகு நாள்
கோபம் சட்டென்று தணிவது போல், சட்டென்று மழை வரும், பூமி குளிரும் என்று,
இதோ மழை பொழிகிறது, சில்லென்று காற்று வீசுகிறது!
இயற்கையின் துணையே அலாதி!
--------------------
எப்போதும்
அன்பாய் இருப்பவர்களின் ஒரு கணத்துக் கோபமும், எப்போதும் கோபமாய்
இருப்பவர்களின் சில நேரத்தின் அன்பும், பாலைவனச் சோலை போல காட்சி பிழை
புரிகிறது நெஞ்சில்!
----------------------
சலசலவென்ற குழந்தைகளின் ஓயாத பேச்சில், கடவுள் ஆழ்ந்த அமைதியில் நிறைந்திருக்கிறார்!
நாம் வாழ்வதற்கான சக்தி இங்கிருந்தே தொடங்குகிறது!
----------------------
Thursday 30 May 2013
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
# கொலைகார_தேசம் பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்...
No comments:
Post a Comment