Thursday 12 September 2013

உள்ளச்சார்பு

கடந்துச் செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்

கிடைத்தது ஏதுமில்லை
வலிகளும் வேதனைகளுமன்றி

கொள்ளைக் கொண்டது ஏதுமில்லை
கொடுத்துச் சென்றதன்றி

எடுத்துக்கொண்டது ஏதுமில்லை
தவரவிட்டதன்றி

கண்ணீரைத் தந்ததில்லை
புன்னகையைப் பெருக்கியதன்றி

செல்வத்தைப் போற்றியதில்லை
சில துன்பம் நீக்கியதன்றி

எவரையும் வீழ்த்தியதில்லை
தோள் சாய நின்றதன்றி

இழந்தது அதிகமென
பெற்றது சிறுமையென
நிர்சிந்தையில்
ஓர்கணம் நிலைதடுமாற......

யாருமற்ற முதியவளின்
சுருங்கிய கரங்கள்
தலை தொட்டு
நேசத்துடன் வாழ்த்திட
ஆண்டவனின் குழந்தையொன்று
அப்பா என்று கன்னம் வருடிட.....

கடந்து செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்
அத்துணைப் பாறைகளையும்
தகர்த்துக்கொண்டே

ஒளியில்லா ஓர் வாழ்வும்
பிறர்க்கு ஒரு விளக்காகும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!