Thursday 23 January 2014

தாய்மை


இங்கும் அங்கும்
தாவியது தனியே,
ஏதோ ஒரு கொட்டையை
கண்டெடுத்துக்
கையில் கொண்டது,
உறுத்து நோக்கும்
என் இருவிழிகள் கண்டது -
நானும் தனியே,
என்ன நினைத்ததோ?
அச்சிறுக் கொட்டையை
என்னிடம் வீசிச்
சென்றாள்
அந்த அணில் அம்மா!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!