Tuesday 10 June 2014

அவன், அன்பு மற்றும் ஆப்பிள்!

அந்த ஆப்பிள் மரம் 
அவனுக்குக் கனி தந்தது 
வீட்டின் நிழல் தந்தது 
 
பயணத் தூரம் கடக்கத் 
துணை செய்தது 
இறுதியில் சாயத் 
தன் மடி தந்தது 
 
அனைத்தும் பகிர்ந்து 
உயிர் ஒடுங்கிய மரத்திற்கு 
அன்பைக் கூட 
அவன் தரவில்லை
 
படித்த கதையின் தாக்கம் 
நிறைந்திருக்கிறது 
மனிதர்களிடையே 
சிலர் ஆப்பிள் மரங்களாய்  
பலர் வெற்று மனிதர்களாய்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!