ஆரவாரமான
மிருகங்களை
கடந்த பின்,
மேல் தைத்த
முட்களை
விலக்கியப் பின்,
எனதென்ற
எண்ணம்
துறந்த பின்,
ஆழப் புதைகிறது,
மேலும் ஒரு கல்
தனித்ததொரு
மனக்குளத்தில்
நினைவுகளாக!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment