Monday 16 June 2014

பொல்லாத மனம்

பெற்றவளிடம் இருந்து
பிள்ளையைப் பறித்து
முன்பு நீ கன்னிதானே
என்று காமுறும்

பொய்யில் நிறைத்து
மனதைக் கொய்து
நினைவுகளை விதைத்து
மெய்யொன்று விட்டகலும்

இப்படிதான் இப்படிதான்
என்று இயல்புகொன்று
தன்னியல்பை நிலைநிறுத்த
அயராது போரிடும்

தன்குறைகள் தக்கதென
அவள்குறைகள் தகாததென
விரும்பும் போது மட்டும்
மலரச் சொல்லும்

கரம்கொடுத்து விரல்சொடுக்கி
தாய்மையில் மனம் நிறைக்கும்
நான் இல்லையெனில் என்ன
செய்வாய் என்று தள்ளிவிட்டு
கெக்கலிக்கும்

ஒருபோதும் பெண்மை
உணராத
பொல்லாத ஆணின் மனம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!