Wednesday 15 October 2014

கலைந்த வெட்கம்!

விரிந்த இளம் பச்சையில்
போர்த்திய ஆடைக் கொண்டு
உறங்கிக்கொண்டிருந்த மலைமகள்
மனிதர்களின் வரவால்
தூக்கம் கலைந்தெழுந்து
அவசரமாய் அள்ளி உடுத்தியதில்
கரும்பச்சையாய் சாயம் போனது
கிழிசலைத் தைத்து உடுத்திய
அவள் வெட்கம் - தன்
மரங்களை இழக்கும் முன்! 



Photo Courtesy: Erode Kathir

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!