Friday 31 October 2014

புரட்சியாளர்களின் பூனைகள்!

சேகுவரா படமிட்டு புரட்சி செய்து,
இரட்டைக் குவளை, இலங்கைக் கொலை - எனச் 
சமூகத்தைப் பிரித்து, இனத்தைச் சாகடிக்கும் 
அவலங்களைச் சாடி,
சாதியென்ன மதமென்ன,
தமிழர்தாமே இந்தியர்தாமே என உணர்வுக் காட்டி,

பெண்மையின் பிம்பமாய் வடிவம் காட்டி, 
அறசீற்றத்தில் பொங்கி எழுந்து -
பன்முகம் காட்டி  உலவும் 
ஒரு சமூகவலைத்தளத்தில்,
 
முகமறியா நட்பெனினும், 
நியாமில்லை என்று அறிந்திடினும்,
சட்டென்று வெளியில் வரும் 
மொழி, இனமெனும் பூனைகளின் 
அறிமுக மையப்புள்ளியில் - உங்களின் 
அத்தனை நியாயங்களும் செத்துவிழும் - பின் 
எழுதிக் களைத்து புரட்சி அலுத்து - நீங்கள் 
 வெளியில் வரும் வேளையில்,
கையேந்தி  நிற்கும் வறியவர்க்கு,
சட்டென்று பிச்சை மறுத்து,
மெலிந்துக் கிடந்த நாயின்மேல் 
வீசிக் கல்லெறிந்து,
பெண்ணின் விழித் தவிர்த்து,
அறிவின்கண் பார்வையை
அவள் அங்கங்களில் உறுத்து,
ஊசிப்போன உப்புமாவையும் 
வயிற்றுக்குள் உகுத்து,
கொஞ்சம் புகையில், கொஞ்சம் பானத்தில் 
இலக்கியம் பிதற்றி,
இயல்பாய் வெளியில் வரும் பூனைகள் - 
மெல்ல அவிழ்க்கும் 
உங்களின் நிஜங்களின் முகங்களை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!