Thursday 30 October 2014

மௌனத்தின் வலி

காலையில் பூத்த நீலமலர்,
குழந்தைகளின் செல்லச் சேட்டை,
வெட்கமுறச் செய்த ஒரு நினைவு,
வெகுண்டெழுந்த சிறு நிகழ்வு,
கண்ணீர் உகுத்துதிர்த்த வலி,
தெளிவைத் தேடியக் குழப்பம்,
சிறிதும் பெரிதுமாய் மலர்கள்,
அத்தனையும் பகிர்ந்துத் தொடுத்து,
நான் மாலையாக்க - விழையும்
பல பொழுதில் -

தெறித்து விழும்
வெறுப்பில் - காய்ந்து கொள்ளும், 
அசிரத்தையானதொரு தருணத்தில்,
மறைக்க முற்படும் முகசுழிப்பில்,
எங்கோ சிலாகித்து ரசித்திருக்கும்
உன் அலைபாயும் மனதில்,
சுள்ளென விழும் வார்த்தையில்,
காய்ந்து உதிர்கின்றன, - நான்
சேர்த்து வைத்த மலர்கள்!

உதிர்ந்ததில் காய்ததில் 
துவண்டு சுருள்வது மாலை
மட்டும் அல்ல -
இம்மனதும்தான் அன்பே!





No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!