Friday 9 January 2015

தாமரையிலைத் தண்ணீர்!

 
தாமரையிலைத் தண்ணீர்போல
நீயும் நானும் இணையாதிருக்கும்
வாழ்க்கையை விட,
கொழுகொம்பின் இலையாக நீயும்
உன் வேரின் நீராக நானும்
இருந்துவிட்டுப் போவோம்!
எப்படியும் வரும் நிறைவு,
ஏதோ ஒரு தூரத்தில் உனக்கும்
என்றோ நீ தந்த நினைவில் எனக்கும்!
இருந்தும், இல்லாதிருக்கும் நினைவுகளை
மீட்டும் மனங்கள் மட்டும்
தரிசாகவே இன்னமும்!


 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!