Friday 13 February 2015

காதலர் தினத்தில்


உழைத்துக் களைத்து
சொற்ப சில்லறையில்,
பிடித்த நிறம் மறவாது,
நெடுந் தூரம் பயணித்து
நீ எடுத்த வந்த பூக்களில்
இதழ்களில்லை!

உதிர்ந்த இதழ்களின்
ஊதா நிறம்,
உன் கண்களில் காண
வியர்வையின் துளியில்
அன்பின் மணம் வீச,
மாறாததொரு
காதல் நிரம்பி வழிகிறது
மற்றும்மொரு
காதலர் தினத்தில்!   

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!