Tuesday 6 October 2015

ஆடை‬

யாரோ ஒரு பெண் சரும நிறத்தில் லெக் கின்ஸ் அணிந்து கொண்டு ரயிலில் பயணம் செய்கிறார், அதை யாரோ ஒருவர் படம் பிடித்துப் பெண்கள் இப்படித்தான் ஆடை அணிவதா என்று பொங்குகிறார், அதையும் பலர் ஷேர் செய்து வழி மொழிகிறார்கள்.

விமர்சனம் செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள், ஆனால் ஒரு பெண்ணின் சுய விருப்பத்தைப் படம் பிடித்துக் காட்ட நீங்கள் யார்? அந்தப் பெண்ணின் புகைப்படம் எடுத்து அநாகரீகம் என்று கருத்து சொல்லும் கனவான்களுக்கு, அனுமதியில்லாமல் ஒரு பெண்ணை வெளிச்சப்படுத்துவது அநாகரீகம் என்று தெரியவில்லையா?

கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் சகட்டு மேனிக்குப் புகைப்படம் எடுத்து விமர்சிக்கலாமா? இந்தக் கருத்துக் கனவான்கள் எல்லாம் டாஸ்மாக் கடை வாசலில் குடித்து விட்டு நிர்வாணமாய் விழுந்துக் கிடக்கும் ஆடவரை புகைப்படம் எடுத்துக் கலாச்சாரம் சீர்கெடுகிறது என்று ஏன் சொல்ல முடியவில்லை? ஏனெனில் நாளை தாமும் குடிப்போம் என்ற மனக்கலவரமே காரணம்.

எந்தப் பெண்ணின் ஆடை விலகுகிறது, எந்தப் பெண்ணின் உடை சரியில்லை என்று பார்ப்பதை விட்டு விட்டு ,

1. அலங்கோலமாய் விழுந்துக் கிடக்கும் ஆண் குலத்திற்கு ஒரு வேட்டியை வாங்கிக் கொடுங்கள் ,

2. கூட்டமாய் இருக்கும் பேருந்துகளில் முழுதாய் உடை அணிந்து வரும் குழந்தைகளையும் பெண்களையும் உரசும் ஆண்களுக்கு நல்ல சரும நோய் மருத்துவரிடம் காண்பித்து மருந்து வாங்கித் தாருங்கள்,

3. நடு வீதியில் குடித்துவிட்டு, கட்டிய மனைவியை மானபங்கப் படுத்துபவனைக் கொஞ்சம் தட்டிக் கேளுங்கள்.

4. மனநிலை பிறழ்ந்து அல்லது வறுமையில் கிழிந்த ஆடை அணிந்து கொண்டு இருக்கும் பெண்களின் மானம் காக்க ஆடை வாங்கிக் கொடுங்கள்,

5. பயணத்தில் குழந்தைகளுக்கு ஆடை நெகிழ்த்திப் பால் தரும்
தாய்மார்களைக் காணும் போது உங்களுக்குப் பால் கொடுத்த அம்மாவையோ உங்களின் குழந்தைக்குப் பால் தந்த உங்கள் மனைவியையோ நினைத்து, பார்வையில் கண்ணியம் கூட்டுங்கள்

6. முடிந்தால் வீட்டில் வளரும் வருங்காலத் தலைமுறைக்குப் பெண்களோ ஆண்களோ அவர்கள், மனிதர்கள் மட்டுமே போகப் பொருளில்லை என்று சொல்லிக் கொடுங்கள், இடத்திற்குத் தக்க ஆடை அவர்களின் விருப்பம் என்று புரிய வையுங்கள் ...

அதுவரை உங்கள் மனைவியோ, சகோதரியோ, அம்மாவோ, மகளோ முதுகுத் தெரிய ஜாக்கெட் அணிந்தால் , மார்பும், தொப்புளும் தெரிய, சேலை அணிந்தால் , கெண்டைக்கால் தெரிய ஆடை உயர்த்தி, வேலை செய்தால், சொல்லி வையுங்கள் ,

"என்னைப் போல் ஒரு தகப்பனோ, கணவனோ, சகோதரனோ, மகனோ, நண்பனோ, கையில் ஸ்மார்ட் போனுடன் காலச்சாரம் காக்கத் திரிவான் , அவன் உங்களைப் புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் சமூக வலைத் தளத்தில் பதிந்து பல்வேறு நிறம் கூட்டி உங்களை வதை செய்வான் என்று"
புரிந்து கொள்ளுங்கள் யாரோ ஒருவரின் மனைவியை , மகளை , சகோதரியை, அம்மாவை , தோழியை விமர்சிக்க அவர்களின் புகைப்படத்தைப் பகிர உங்களுக்கு உரிமையில்லை!


With all humbleness I would like to say that no girl take pictures of guys who are half naked on streets with shorts in the name of trend or fully naked on streets Bcoz of Tasmac. Boys are grown up with the thought process of vulgarity and sexuality being imposed on girls. What is a proper dress? The views varies in different men's eyes, girl is not a commodity to change their living to the whims and fancies of guys!
Grandmother in villages even in some places don't wear blouses, from a kid to elderly, women are raped despite age, despite dress code.
So what is needed is a code of conduct for guys to treat the other gender with respect and not a dress code for girls!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!