Friday 16 October 2015

ஜீவமரணப் போராட்டம்!

 
வேடனின் கண்ணியில்
தப்பிய மானொன்று
புதைகுழியில் சிக்கியது

பற்றுதலென அது பற்றிய
மந்தாரையில் படர்ந்திருந்த
முறுக்கேறிய முல்லைக்கொடி
பாரத்தில் தள்ளாடியது

வேரோடியிருந்த முல்லையின்
பலத்தில் மானோ
மானை விடுவிக்கும்
போராட்டத்தில் முல்லையோ

விடுதலில் பற்றுதலில்
ஜீவமரணப் போராட்டம்
ஒன்றோயில்லை இரண்டுமோ
பிழைத்தல் யாரென்பது
காலத்தின் கருணையில்
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!