Friday 6 November 2015

காதலிடம்‬

நேற்று பிடித்த நிறம்
இன்று பிடிக்காமல் போகலாம்,
நேற்று உண்ட உணவு
இந்த நொடியில் நினைவில் மறையலாம்,
நேற்று ஒரு துயரமும்
இன்று ஒரு மகிழ்ச்சியும் மாறி மாறி
தழுவியிருக்கலாம்,
இப்படியென்று எளிதாய்
மோகத்தில் நெகிழ்கையில்
வெற்றுக் காமமென்றும்
கோபத்தில் தள்ளுகையில்
தீராத வன்மமென்றும்
மாறாத அன்பைத் தள்ளிவிடக் கூடுமோ ?

காமம் கலைந்தபின்பும்
கோபம் மறைந்தபின்பும்
எஞ்சி நிற்பது அன்பென்றால்
தீராத அவ்வன்பு அன்பு மட்டும்தான்
என்றே சொல்லிடலாம்
கண்ணில் படித்து மனதில் படர்ந்த
‪#‎காதலிடம்‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!