Friday 6 November 2015

முரணான நியதி

இரவு என்பது இருளிலும்
பகல் என்பது வெளிச்சத்திலும்
எப்போதும் போல் கரைகிறது!
வாழ்க்கை மட்டும் -
சிலவேளைகளில்
குளிரில் தகிக்கிறது,
தகிக்கும் வேளையில்
போர்வையில்
சுருண்டுக் கொள்கிறது!
இருளையும் வெளிச்சத்தையும்
அதன் முரணான நியதியிலேயே
மனிதகுலம் கடக்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!