Friday 6 November 2015

Perception

ஒருவரை ஒரு தவறுக்காக கடிந்துக் கொண்ட பின்னர், பின் அவர் செய்யும் எந்த செயலையும் முன் செய்த தவற்றின் அடிப்படைக் கொண்டே எடைப் போட்டுக் கொல்வதே பெர்செப்ஷன் (perception) என்பது!
தவறு என்று நீங்கள் கருதுவதை அவர் செய்தது என்னவோ ஒருமுறைதான், ஆனால் அந்த பிம்பத்தை பல்வேறு வர்ணம் கொண்டு, அவர் பிற்பாடு செய்யும் காரியங்கள் அனைத்திலும் பொருத்திப் பார்த்து, உங்களின் வசதிக்கேற்ப அவரை முட்டாளாகவோ, வன்மம் பிடித்தவராகவோ, திமிர்ப் பிடித்தவராகவோ, செயல் திறன் அற்றவராகவோ கற்பனை செய்து கொள்கிறீர்கள்.
கொலைக் குற்றவாளிக்குக் கூட கருணைக் காட்ட முற்படும் நீங்கள், வீட்டில், வெளியில், அலுவலகத்தில் என்று , ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை தருவதை எப்போது நிறுத்த முற்படுகிறீர்களோ
அப்போது தான் எந்த உறவும் காயப்படாமல் இருக்கும்!
புதிதாய் மாற்றங்களும் மலரும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!