Tuesday 24 November 2015

கடவுள் காரணமில்லை

நாடு, மொழி, இனம், மதம், சாதி என்று
மனிதர்கள் வெட்டிக் கொண்டு சாக
ஒரு போதும் கடவுள் காரணமில்லை,
அவரை யாரும் பார்க்கவும் இல்லை,
கொலை செய்வதற்கு முன்பு நீங்கள்
கொல்லப்படுபவனின் கண்களை
உற்று நோக்கவும் இல்லை
இறந்தவனின் இறைஞ்சிய பார்வையில்
அவனின் கண்ணீர் துளிகளில்
அந்தக் கடைசி நேரக் கண்சிமிட்டலில்
கடவுள் தோன்றினார் - ஆமாம்
நீங்கள் அவரைப் பார்க்கவேயில்லை
இறைவன் மரித்துப்போனார்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!