Tuesday 6 October 2015

Dress Code/ ‪ஆடை‬


1. குடித்து விட்டு ஆண்கள் திரிகிறார்கள், அவர்களுக்குப் பெண்ணின் உடை காமத்தை தூண்டும்

2. பெண், ஆணின் கண்ணை உறுத்தாமல் உடை அணிய வேண்டும்

3. பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும்

4. ஆண் ஆடையின்றித் திரிவான், பெண்ணால் அப்படித் திரிய முடியுமா?

5. அரைகுறை ஆடையும் கவர்ச்சி, முழுதாய் மறைத்தாலும் எதுவும் கண்ணை உறுத்தக் கூடாது

இப்படியே போகிறது, “ஆடை” பதிவை பகிர்ந்து ஆண்களின் பெண்களின் விமர்சனங்கள், எதையும் அரைகுறையாய்ப் படித்துச் சகட்டுமேனிக்கு விவாதம் செய்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

பலதரப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பழகுகிறேன், சில நாடுகளுக்குத் தனியே பயணம் செய்திருக்கிறேன், இந்த லெக் கின்ஸ் கூட அணியாமல், ஆடைச் சுதந்திரத்துடன் பெண்களைக் கண்டிருக்கிறேன், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசும் ஆண்களையும் கண்டுக் கடந்திருக்கிறேன், எல்லா ஆண்களுக்கும் பெண்களின் உடை கிளர்ச்சித் தரும் என்ற வாதமே தவறானது!

துவைத்து உலர்த்திய பெண்களின் துணிகளைத் தொட்டுக் கிளர்ச்சியடையும் ஆண்கள் உண்டு என்று மனநலன் பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன், ஆண்களின் கிளர்ச்சி என்பது அவர்களின் வளர்ப்பு முறையை, அவர்களின் தனிப்பட்ட ஒழுக்க மனநலனைச் சார்ந்தது, அது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் பாழ்பட்டுக் கிடக்கிறது!

1. பலகீனமான சட்டம் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை,

2. சாராயமே வருமானம் என்ற அரசியல் ஆண்களை மேலும் பலவீனமாக்குகிறது.

3. பெண்களுக்கான அரசியல் வாய்ப்பு இன்னமும் 33 சதவிதம் என்ற அளவைக் கூட எட்டவில்லை,

4. எந்தக் குற்றம் நடந்தாலும் "அவ ஒழுங்கா இருந்திருக்கணும்" என்ற கூற்றிலேயே எல்லாம் முடிந்துவிடுகிறது,

5. அதே பாலியல் குற்றம் குழந்தைகளிடத்திலும் , முதிய பெண்களிடமும் நிகழும்போது இந்தக் காலச்சார ஆண்கள் கூட்டம் பதிலே இல்லாமல் வாயடைத்துப் போகிறது,

6. அப்போதும் குடியையும் வேறு ஏதோ காரணத்தையும் தேடி நியாயம் பேசுகிறது!

தன் பெண் குழந்தையைத் தேவதை என்று கொண்டாடும் தகப்பன்களின் கூற்றில் உண்மை இருக்குமென்றால், அடுத்தவர்களின் குழந்தையை, பெண்ணை அவர்கள் பார்க்கும் பார்வையில் கண்ணியம் இருக்கும்,
தன் தாயை தெய்வமென்று கொண்டாடும் ஆண்களின் கூற்றில் நேர்மை இருக்குமென்றால், அவர்கள் தன் மகன்களுக்குப் பெண்ணை சக மனுஷியாய் பாவிக்கும் மனநிலையை வளர்த்து விடும் முயற்சி இருக்கும்.

பளீரென்ற வர்ணத்தில் உடை உடுத்தினால் கண்ணை உறுத்தும், முழுக்கை சட்டை அணிந்து கால்சராய் அணிந்தாலும் அங்கங்கள் தெரியும், லெக் கின்ஸ் என்பது ஆபாசம், புடவை என்பது கவர்ச்சி, முழுதாய் பர்தா அணிந்து கொள்வது சரியாய் இருக்குமோ ?

பெண்களை விமர்சித்துக் கொள்ளுங்கள், கொஞ்சம் ஆண் குழந்தைகளின் மனநலனையும் கவனியுங்கள், உடலளவில் வலிமையான ஆண்களைச் சாராயப் போதையில் மூழ்கடித்து , அவர்களுக்குப் பெண்களையும் போகப்பொருளாய் மட்டுமே பயிற்றுவித்து, வெறும் சுயலாபத்திற்காகப் பெண்களைப் படம் பிடித்துக் கொண்டே சில பத்திரிக்கைகள் வியாபாரம் நடத்துகிறது, ஊழல்களில் அரசியலும் சீழ்ப்பிடித்துக் கிடக்கிறது! பலம் கொண்ட ஆண்களின் கூட்டம் பெரும்பாலும் இவைகளிலேயே முடங்கிப் போகிறது !

புரிந்து கொள்ளுங்கள், இந்திய மண்ணின் பிரச்சனை பெண்களின் உடையில் இல்லை, அது பலகீனமான ஆண்களின் மனதில் உள்ளது, மோசமான சமூகச் சூழலில் தன் தவறுகளை, குடியை என்று எதையும் பெண்களின் மீது சுமத்தி நியாயப்படுத்தும் ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான்!
தலிபான்களின் உலகில் பெண் என்பவள் மனுஷியே இல்லை, பெண்களே உங்கள் உடைகளைச் சரிசெய்து கொள்ளுங்கள்!


 Despite a clear write up, I could see that men still wants to blame the ladies for everything!
Dress is given as the reason for crime and rape, unfortunately all the children, women of all age who became victims of sexual abuse and violence and murder were actually completely dressed. The so called exposure of skin happens mostly in wide screen and all these men are crazy followers of those cinema celebrities.
In real life, if a woman is not dressed up properly that is not an authorisation for you to neither bully the lady nor rape her. Who the heck are you?
A baby is born naked, elderly at rural areas are without blouses, tribes in some places are without dresses, now it's time to revive that so called 'chastity' in men's eyes than in your search for it in any women's womb!
Those who are glued to your conventional views and still have the grave in your eyes for sexuality, pls get the questions diverted to your women in your respective family!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!