Wednesday, 12 April 2017

கீச்சுக்கள்

வெறுமனே நிர்வாணமாய் நிற்காமல் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு கையில் சூலாயுதம் வைத்துக்கொண்டு நின்றிருந்தால் முதல் நாளே பிரதமர் ஓடோடி வந்திருப்பார்!
ஆர்.கே நகரில் நின்றிருந்தால் முதல்வர் வந்திருப்பார்!
சாலையில் தமிழ்நாட்டின் விவசாயியாக நிற்பதால், தனிப்பட்டு நிற்கிறார்கள்!
****

ஒருநாளைக்குச் சராசரியாகப் பத்துப் பிச்சைக்காரர்களைக் கடக்க வேண்டியிருக்கிறது
அதில் நான்கில் ஒரு பகுதியினர் கிழிந்த ஆடையுடனும், மீதி இரண்டுபங்கு உத்தியோகப் பதவித் தோரணையுடனும், கடைசி ஒரு பங்கு தேர்தலுக்காக ஏக்கத்துடனும் காத்திருக்கிறது!

***
"எந்தச் சாதியைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தால் நேர்மையாகச் செயலாற்றுவார்??"
இந்தக் கேள்விக்கு,
1.. ""நேர்மையா?" அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது" என்று பதில் இருக்குமானால், நாம் ஊழலை ஏற்றுக்கொண்டுவிட்டோம்
2. "எங்க சாதி ஆளுதான்" என்றால் இன்னும் நீங்கள் கிறிஸ்த்துப் பிறப்புக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கிறீர்கள்
3. "எந்தச் சாதியாய் இருந்தால் என்ன, நல்ல மனிதராய் இருந்தால் போதும் என்றால், நீங்கள் முற்போக்குச் சிந்தனையை முன்னெடுத்து இருக்கிறீர்கள்
4. "நேர்மையாய் இல்லைனா தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும்" என்று வெறுமனே பொங்குவீர்கள் என்றால் நீங்கள் இந்தியச் சிகப்பு சங்கத்தினர்
5. "அவனவன் இருக்குற இடத்தில் இருந்துட்டா, நாடு சுபிக்ஷமா இருக்குமே!" என்றால் நீங்கள் பழைய மனுதர்மத் திண்ணைக்காரர், ஓரமாய் நில்லுங்கள்!
6. "என்னளவில் நான் நேர்மையாய் இருக்கிறேன், மாற்றம் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கும்போது நிச்சயம் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் நேர்மையானவர் தான்" என்றால், தயவு செய்து நீங்கள் உடனே கட்சி ஆரம்பித்துவிடுங்கள், இல்லையென்றால் காத்திருங்கள்!
7. "எவனாய் இருந்தால் என்ன, கமிஷன் அடிச்சாலும் கொஞ்சமாச்சும் மக்களுக்கு நல்லது செய்யறவனா இருந்தால் போதும்", என்றால் நீங்கள் ஓட்டுக்கு நிச்சயம் காசு வாங்குவீர்கள், நீங்கள்தான் அந்தத் தேசபக்தர்கள்! :-p :-p
 ***

அந்தப் பெண்ணை அடித்தது காவல்துறை அதிகாரி அல்ல
சாராயக்கடையில் மூழ்கியிருக்கும் இந்தகுடிகாரச் சமூகம்தான்!
திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட போதையும் காவல்துறையும்
சரியாய் வேலைச்செய்கிறது
இன்னுமா இவர்களுக்கு ஓட்டுபோடப்போகிறோம்?

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...