Wednesday 12 April 2017

கீச்சுக்கள்

இந்த நாடு நிர்வாணமடைந்துப் பலவருடங்கள் ஆகிறது
ஓட்டுக்காகக் கையேந்தியே இந்த மக்கள் உடுக்கை இழந்து விட்டார்கள்
அந்த விளைவுதான் இங்கு ஆள்பவர்கள் ஆணவத்துடன் அமைதியாய் இருக்க
விவசாயிகள் வழியறியாமல் நிர்வாணமாய் நிற்கிறார்கள்
தமிழத்தில் முதல்வர் இருக்கிறார்,
டெல்லியில் பிரதமர் இருக்கிறார்
நாடு முழுக்க மக்கள் இருக்கிறார்கள்
ஆனால் சுயம் என்ற ஒன்றைத்தான்
தமிழகம் தொலைத்துவிட்டது!

*****
ஏதாவது ஒரு அரசியல்வாதி அல்லது அவனின் வாரிசு;
சாலை விபத்தில் மிகக் கொடூரமாய் சாகும்போது
புற்றுநோய் தொழுநோய் வந்து அழுகும் போது
தவறான மருந்தின் விளைவால் உறுப்பையோ உயிரையோ இழக்கும்போது
கடத்தப்பட்டு பாலியல் வியாபாரத்திற்கு விற்கப்படும்போது
அணுவுலை விபத்தில் சிக்கும்போது
மீத்தேன் கிணற்றில் விழும்போது
சாராயத்தில் குடல்வெந்துச் சாயும்போது
அரசாங்க மருத்துவமனையில் நாய் படாதபாடு படும்போது
தனியார் மருத்துவமனையில் உறிஞ்சப்படும்போது
கல்விக்காக கால்கடுக்க நிற்கும்போது
தாகத்துக்கு மாசடைந்த நீரைக் குடிக்கும்போது
புழுபுழுத்த அரிசியில் சமைத்து உணவை உண்ணும்போது
ஏதோ ஒரு வெடிவிபத்தில் சாகும்போது
.......

இங்கே மக்களுக்கு நீதிகிடைக்கும், மாற்றம் வரும், வெளிச்சம் வரும், மழையும் வரும்!

***

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!