
கருப்பு பூனை ஒன்று இருட்டில் ஓடுது,
பளீரிடும் கண்கள் மின்னலாய் ஒளிருது,
இறைவன் தந்த
பாதுகாப்பு அம்சம் - அதன் உயிரைக் காக்குது!
மனிதன் அமைத்த சாலையிலே,
வாகனம் விரையும் இருட்டு வேளையிலே,
பளீரிடும் முகப்பு விளக்கோ
கண்களைக் கொல்லுது
சில நேரங்களில் உயிரையும் எடுக்குது!
No comments:
Post a Comment