Thursday, 24 January 2013

அவள் மழை வேண்டி நின்றிருந்தாள்


அவன் உழைத்து கொண்டிருந்தான் 
இறைக்கும் கிணறுப் போல....
அவர்கள் சேந்திக் கொண்டிருந்தார்கள்
அவனால் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
அவள் ஓரமாய் நின்று ஊற்றுகளை
இணைத்துக் கொண்டிருந்தாள்....

நிலம் உழுதான், விதை விதைத்தான்
நீர் பாய்ச்சினான்...
அவர்கள் அறுவடை செய்தார்கள்
அவள் மழை வேண்டி நின்றிருந்தாள்
உயிர் நனைய உதிரம் தந்தாள்

ஓடிய மாடு உழைத்து களைத்தது
கொட்டிலை விட்டு துறந்து வந்தது
கூடு விரிந்து பறவைகள் பறந்தது
நிழலாய் அவள் மட்டும் தொடர்ந்தாள்

உழைக்கையில் உன்னை கண்டதில்லை
நீயும் என்னை அண்டியதில்லை
ஏதுமற்றவன் நான் - எதை
வேண்டி வந்தாய் இப்போது?
விலகிச் செல் பெண்ணே - இதயம்
கூட நின்றுவிடும், பாழ்பட்ட பொருளை
தருவதற்கில்லை போய்விடு என்றான்

நிழல் வருவது நினைவுக்குத் தெரியாது
பெறுவதற்கு ஏதுமில்லை - தருவதற்கே
வந்தேன் - என் இதயம் பொருத்தி
உன் உயிர் மீட்ட என்றாள் - உணர்வு
விழிக்கையில், மனம் துடிக்கையில் 
உயிர் தந்து நிழல் மறைந்தது! 
 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...