
நிதம் தேடும் ஓட்டம்
சிலர் விழ, சிலர் அழ
ஓயாமால் தொடருகிறது
சிப்பி கிடைக்கிறது,
முத்தும் கிடைக்கிறது
முள்ளும் தட்டுப்படுகிறது
கொலையும் நடக்கிறது -
கொள்ளையும் நிகழ்கிறது
குழந்தை அழுகிறது - காதல்
போகிறது - அம்மா சாகிறாள்
சில வயிறு வாடுகிறது - சில
மனம் நோகிறது - சில
துரோகம் நிகழ்கிறது - காட்சி
மாறுகிறது...ஓட்டத்தில் சிலர்
வீழ்கின்றனர், சிலர் மறைகின்றனர்
வென்றவன் நிற்கிறான் - வாரிசு
ஓட்டம் தொடங்குகிறது...
ஓட்(டு)டப்போட்டியில்
கல்லறை தோட்டம் நிரம்புகிறது!
No comments:
Post a Comment