Sunday 13 January 2013

அவசர ஊர்தி


இரவின் அமைதியில்
எங்கோ ஒரு அவசர ஊர்தி
விரையும் சத்தம்!

யாருக்கோ வேதனை
தினம் தினம்!

காமுறுபவனுக்கு தெரிவதில்லை
மனத்தின் கற்பு!

கொல்பவனுக்கு தெரிவதில்லை
உறவுகளின் இழப்பு!

கொள்ளையடிப்பவனுக்கு தெரிவதில்லை
இழந்தவனின் துடிப்பு!

ஏய்ப்பவனுக்கு தெரிவதில்லை
இதயத்தின் கொதிப்பு!

ஆள் கடத்துபவனுக்கு தெரிவதில்லை
கருணையின் மதிப்பு!

கடுமை பேசுபவனுக்கு தெரிவதில்லை
வார்த்தையின் பாதிப்பு! 

எங்கோ ஒரு உயிர்
எங்கோ ஒரு மனம்
தினம் தினம் வதைப்படும் - எல்லா
இடத்துக்கும்
செல்வதில்லை அவசர ஊர்தி!

1 comment:

  1. //எல்லா
    இடத்துக்கும்
    செல்வதில்லை அவசர ஊர்தி! /

    ஆம்!

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!