Sunday 13 January 2013
அவசர ஊர்தி
இரவின் அமைதியில்
எங்கோ ஒரு அவசர ஊர்தி
விரையும் சத்தம்!
யாருக்கோ வேதனை
தினம் தினம்!
காமுறுபவனுக்கு தெரிவதில்லை
மனத்தின் கற்பு!
கொல்பவனுக்கு தெரிவதில்லை
உறவுகளின் இழப்பு!
கொள்ளையடிப்பவனுக்கு தெரிவதில்லை
இழந்தவனின் துடிப்பு!
ஏய்ப்பவனுக்கு தெரிவதில்லை
இதயத்தின் கொதிப்பு!
ஆள் கடத்துபவனுக்கு தெரிவதில்லை
கருணையின் மதிப்பு!
கடுமை பேசுபவனுக்கு தெரிவதில்லை
வார்த்தையின் பாதிப்பு!
எங்கோ ஒரு உயிர்
எங்கோ ஒரு மனம்
தினம் தினம் வதைப்படும் - எல்லா
இடத்துக்கும்
செல்வதில்லை அவசர ஊர்தி!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
//எல்லா
ReplyDeleteஇடத்துக்கும்
செல்வதில்லை அவசர ஊர்தி! /
ஆம்!