காடு அழித்து நாடு செய்து
வழித்தடம் தெரியாமல் வந்து
திரியும் விலங்குகள்!
பழிவாங்கும் படலம் ஏதுமின்றி
பசிக்கு நம்மை இரையாக்கும்!
உடன் விலங்கு கொன்று
பொங்கியெழும் மனிதக்கூட்டம்
உயிருக்கு உயிர் என்று
நீதி காத்து, மேலும் காடழித்திடும்!
நரி எது நாய் எது புலி எது பூனை எது
யார் எது இம்மனிதத் திரளில்
ஒரு இனம் இரத்தம் சிந்த,
சதை பிண்டமாக பல
உயிர் வதைப்பட - உதிரத்தில்
சாதி, மதம், நிறம் - மொழியும்
கண்டு மௌனமாய் சாகிறது
உலக நீதியும் சட்டமும்
காடெது நாடெது இங்கே
கவனித்து செல்லுங்கள்,
தடை செய்யப்பட்ட பகுதி
"மனிதர்கள் எச்சரிக்கை"
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment