Thursday 14 March 2013

மனிதர்கள் எச்சரிக்கை

காடு அழித்து நாடு செய்து
வழித்தடம் தெரியாமல் வந்து
திரியும்  விலங்குகள்!
பழிவாங்கும் படலம் ஏதுமின்றி
பசிக்கு நம்மை இரையாக்கும்!
உடன் விலங்கு கொன்று
பொங்கியெழும் மனிதக்கூட்டம்
உயிருக்கு உயிர் என்று
நீதி காத்து, மேலும் காடழித்திடும்!

நரி எது நாய் எது புலி எது பூனை எது
யார் எது இம்மனிதத் திரளில்
ஒரு இனம் இரத்தம் சிந்த,
சதை பிண்டமாக பல
உயிர் வதைப்பட - உதிரத்தில்
சாதி, மதம், நிறம் - மொழியும்
கண்டு மௌனமாய் சாகிறது 
உலக நீதியும் சட்டமும்
காடெது நாடெது இங்கே
கவனித்து செல்லுங்கள்,
தடை செய்யப்பட்ட பகுதி 
"மனிதர்கள் எச்சரிக்கை"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!