Sunday 24 March 2013

தூரத்தில் ஒரு நட்சத்திரம்!


 தூரத்தில் ஒரு நட்சத்திரம்
சில்லென்று ஒரு மழைத்துளி
எங்கோ மிதக்கும் ஒரு இசை
குழந்தையின் சிறுவிரல் தீண்டல்
நன்றியுடன் வாலாட்டும் நாய்
எதிர்பார்த்து நிற்கும் காக்கை
தலைச்சுற்றி பறக்கும் குருவி
தேகம் தொடும் பட்டாம்பூச்சி
யாரோ பரிமாறும் புன்னகை
கூந்தல் கலைக்கும் காற்று
முண்டாசுக்  கவி பாரதி
அம்மா சுட்ட முறுக்கு
பாதி முடித்தக் கவிதை
திறந்து வைத்தப்  புத்தகம்
வார்த்தை காக்கும் மரபு
நீண்டு விரிந்த நிழற்சாலை...........
கால்கள் நடை போட - மனம்
எங்கோ  மறுத்தோடும்
ஒரு துயரை தொலைக்க
பாதி வழி கடக்க - விதி பாதை
மறிக்கிறது - விழிகளில் 
காட்சி விரிகிறது - இயல்பு
கண்ணை மறைக்கிறது....
போன வழிப்  பயணவழியாக
இயற்கை உயிரை மீட்டுது! - வலிமீண்டு
வாழ்வு தொடருது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!