Monday 25 March 2013

இது யார் வாழும் பூமி?

தமிழன் என்று கொல்கிறாய்
முகமதியன் என்று மூர்க்கமாகிறாய்
தலித் என்று தலையெடுக்கிறாய்
பெண் என்றாலே புணர்கிறாய்
குழந்தாய் என்றாலும் மிருகமாகிறாய்
ஏழை என்றே ஏறி மிதிக்கிறாய்
குருதி நிறம் சிவப்பென்று வாதாடவில்லை
நீதி நியாயம் பேசி தீர்க்கவும் நேரமில்லை
பசித்தால் புசித்திடும் மிருகம் கூட
உன்னை கண்டால் ஓடி ஒளிகிறது
பிணம் தின்னும் மிருகத்துக்கு தீருமோ பசி?

தினம் தினம் சாகும் உயிர்களுக்குள்
ஒரே ஒரு கேள்விதான் ஊற்றெடுக்கிறது
எளிதாய் நிமிடத்தில் நிகழும் தவறுக்கு
தீர்ப்பு மட்டும்.................................???
இது யார் வாழும் பூமி?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!