Saturday 9 March 2013

மற்றுமொரு காட்சி!

உஷா அக்காவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு
வந்தது - அன்று வாங்கிய சம்பளம்
குடிகார கணவனால் திருடப்பட்டிருக்க - மூத்த
குழந்தையின் பள்ளி கட்டணத்திற்கு கடைசி நாள்
விதிக்கப்பட்டிருக்க - இளைய குழந்தையோ
காய்ச்சலால் அழன்று விட்டிருந்தது - பரபரப்பில்
காலையில் குடித்த கஞ்சி வயிற்றுக்குள் காணாமல்
போய் விட்டிருக்க  - துவண்ட கரங்களால்
அண்டை வீட்டு கதவைத்  தட்டினாள்  - மின்னலாய்
வந்த சிறுமி சன்னமாய் ஒரு புன்னகையில்
"அம்மா வீட்டில்  இல்லை அத்தை", என்கிறாள்
சற்று பின்னே வந்த அம்மா,
"போயிட்டாளா? சீக்கிரம் வாடி
சனியனே, இரண்டு மணிக்கு அந்த
கடன்காரன் அபியை இன்னும் என்ன படுத்தப்போறான்னு
தெரியல - அடுத்த வாரம் வர சீன்லயாவது அந்த
பொண்ணுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கணும்"
மனதார வேண்டிக்கொண்டாள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!