உஷா அக்காவுக்கு கண்ணை கட்டிக்கொண்டு
வந்தது - அன்று வாங்கிய சம்பளம்
குடிகார கணவனால் திருடப்பட்டிருக்க - மூத்த
குழந்தையின் பள்ளி கட்டணத்திற்கு கடைசி நாள்
விதிக்கப்பட்டிருக்க - இளைய குழந்தையோ
காய்ச்சலால் அழன்று விட்டிருந்தது - பரபரப்பில்
காலையில் குடித்த கஞ்சி வயிற்றுக்குள் காணாமல்
போய் விட்டிருக்க - துவண்ட கரங்களால்
அண்டை வீட்டு கதவைத் தட்டினாள் - மின்னலாய்
வந்த சிறுமி சன்னமாய் ஒரு புன்னகையில்
"அம்மா வீட்டில் இல்லை அத்தை", என்கிறாள்
சற்று பின்னே வந்த அம்மா,
"போயிட்டாளா? சீக்கிரம் வாடி
சனியனே, இரண்டு மணிக்கு அந்த
கடன்காரன் அபியை இன்னும் என்ன படுத்தப்போறான்னு
தெரியல - அடுத்த வாரம் வர சீன்லயாவது அந்த
பொண்ணுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கணும்"
மனதார வேண்டிக்கொண்டாள்!
Subscribe to:
Post Comments (Atom)
My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
தினம் பிறக்கும் மணம் பரப்பும் - மலர்கள் வாடி உதிரும்வரை! ஒரே நாள் வாழும் மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள் உயிர் பிரியும்வரை! நூறு ஆண்டுக...
No comments:
Post a Comment