Friday 30 May 2014

முடிந்த மட்டும் மடியும் வரை

Photo: அக்கரட்டில் 
பிழைத்த செடியில் 
பூப் பூத்தது அன்று 
பெய்த மழையாலோ? 
இலை தழுவிய 
பனித்துளியாலோ? 
ஆழப் புதைந்த 
அதன் வேரினாலோ? 
 
பறிக்கும் உனக்கு 
தெரிந்ததெல்லாம்  
நிறமும் அதன் மணமும் 
உயிரின் போராட்டமில்லை!
அட  
பூவின் குரல் பாறைகளுக்கு 
கேட்பதுமில்லை! 
 
எனினும் 
அத்தனை பூக்களும் பூக்கும் 
முடிந்த மட்டும் மடியும் வரை!
அக்கரட்டில்
பிழைத்த செடியில்
பூப் பூத்தது அன்று
பெய்த மழையாலோ?
இலை தழுவிய
பனித்துளியாலோ?
ஆழப் புதைந்த
அதன் வேரினாலோ?

பறிக்கும் உனக்கு
தெரிந்ததெல்லாம்
நிறமும் அதன் மணமும்
உயிரின் போராட்டமில்லை!
அட
பூவின் குரல் பாறைகளுக்கு
கேட்பதுமில்லை!

எனினும்
அத்தனை பூக்களும் பூக்கும்
முடிந்த மட்டும் மடியும் வரை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!