Wednesday 7 May 2014

மீட்டுமோ

 
 தனையறியா நாளில்
பிறந்திட்ட ஒன்று
தனைமறந்த உயிரின்
நிலைதனில் இறந்திட்டது
விழிமூடி ஒரு நீளுறக்கத்தில்
தன் மனம் கொன்று துயில்கிறது
கசிந்துருகும் மௌனத்தின் இசை
அதன் உயிர் மீட்டுமோ
இல்லை அதன் வேரறுத்து
ஒரு மீள உறக்கத்தில் வீழ்த்திடுமோ?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!