Thursday, 9 April 2015

கீச்சுக்கள்!

பிறக்கும்போது தொடங்கும்
பாடங்கள்....இறக்கும்வரை முடிவதில்லை!
ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவமே!

--------------------------------------------------------------------
எழுநூறு கோடி ஏழாயிரம் கோடி என்று ஊழலும், பென்ஸ், லம்போகினி என்று கார்களும், ஐந்து மாடி, அம்பதாயிரம் கோடி என்ற அளவில் வீடுகளும், நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர் என்ற ரீதியில் நிலங்களும், கோடிகளில் புரளும் வங்கிக் கணக்குகளும், பண்ணை, நாட்டாமை, மந்திரி என்ற பதவிகளும், கண்ணில் படும் பெண்கள் எல்லாம் கட்டிலுக்கென்றெ என்ற காமவேட்கையும்..........எத்தனை எத்தனை இருந்தாலும் தங்கமே, மரக்காடு என்றில்லை இடுகாடுக் கூட இல்லாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கும் தேசத்தில், மின்சாரத் தகனம் தான் இறுதியில், அதுவும் உன் அதிர்ஷ்டம் அன்று மின்சாரம் இருந்தால் மட்டுமே!
‪#‎இப்படிக்கு‬ ஜலகண்டேஸ்வரக் கம்ப்யூட்டர் சித்தர் ப்ரம் வாரணாசி ஜெயில்!

---------------------------------------------
நாட்டில் டாஸ்மாக் கடைகள் நிறையும்போது, குடிமகன்களுக்கு இறுதியில் தேவைப்படுமெனப் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றும் முயற்சி......................உண்மையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல யுவர் ஆனர், அது குடிமக்களின் நலனுக்கான தீர்க்க தரிசனமும் கரிசனமுமே!
‪#‎குடி_காக்கும்‬ ‪#‎குடி_அரசு‬!
feeling நாம சொன்னா யாரு நம்பப் போறா 
----------------------------------------------------


 
 


No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...