Sunday 12 July 2015

மகன்

 
பிள்ளைகளுடன் நேற்று மாலை கடைவீதியில்...................

 மகன்- அம்ம்மே இந்த ஏ டி எம் ல கூட்டம் எப்போ குறையும் ?
 நான்- இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல பணம் எடுத்துட்டுக் கிளம்பிடலாம்
 ..
 அம்ம்மே டைம் என்ன?
 6:10 டா

 பிறகு இன்னொரு கடையிலும் இதே
 கேள்வி, அம்ம்மே டைம் என்ன?

 அப்புறம் அடையாறு ஆனந்தபவனில், என்னடா உனக்கு என்ன வேணும்,

 அம்ம்மே ஒரு பானிபூரி அப்புறம் ஐஸ்கிரீம் வித் மில்க் ஷேக், ...
சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் நினைவு வந்தவனாய், அம்ம்மே டைம் என்ன என்றான் மறுபடியும்
 6:40 டா என்றேன்

 என்னது ...(ஒரு இன்ஸ்டன்ட் அதிர்ச்சி அவனிடம்) அம்மே நான் உடனே வீட்டுக்குக் போயாகனும்
ஏன்டா இப்படிப் பறக்குறே ?
 அம்ம்மே என் ப்ரண்ட் கிளாஸ் போயிட்டுச் சிக்ஸ் தர்ட்டிக்கு வரேன்னு சொல்லி இருக்கான், நானும் அவனை மீட் பண்றேன்னு சொல்லி இருக்கேன், அதனால நான் போகணும்

அதெல்லாம் அவன் வெயிட் பண்ண மாட்டான் என்று என் அம்மாவும் சகோதரியும் சிடுசிடுக்க, சரி அவனை அழ வைக்க வேண்டாம் என்று, அவனுடன் எல்லோரையும் அனுப்பி விட்டு, மகளுடன் கடைவீதியில் வாங்க வேண்டியவைகளை வாங்கி விட்டு வீடு திரும்பினால், தம்பி அமைதியாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்,
என்னப்பா ப்ரெண்டை பார்த்தியா?
 இல்லம்மா, அவன் இன்னும் வரலை
 பார்த்தியா அவனுக்கு வேலை இருக்கும், நான்தான் சொன்னேனே
 அம்ம்மே, அவனுக்கு நான் கமிட் பண்ணிட்டேன், அவன் மிஸ் பண்ணாலும், நான் கமிட் பண்ணதை நான் மிஸ் பண்ண முடியாது ...

 (அப்படியே ஜெர்க் ஆகி, நினைவோட்டத்தில் கருப்பு வெள்ளை பிளாஷ் ஃபாக் சுழற்சியில் பல சமயங்களில் என் அப்பாவிடமும் கணவரிடமும் ஒரு சொல் ஒரு வாக்கு என்று பலமுறை கமிட்மென்ட் முக்கியம் என்று நான் செய்த வாதங்கள் நினைவில் வந்து மோதியது)

 அடடா மகன்டா என்ற பெருமிதத்துடன் செல்லம், அப்படியே ஸ்கூல்க்கும் நேரத்துக்குப் போகணும், டைம் கமிட்மென்ட் இஸ் ஆல்சோ இம்பார்டன்ட் என்றதும் , 
 அம்மே அதான் கமிட்மென்ட் மிஸ் பண்ணாம ஸ்கூலுக்குப் போறேன்லா என்று இன்ஸ்டன்ட் பல்பு கொடுத்தான்

 இன்று காலையில் அவன் செஸ் மாஸ்டர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது, "மேடம் உங்க பையனோட விளையாடும்போது, அவனைத் தோக்கடிக்க எதிராளிக்கு நானோ மத்தப் பசங்களோ டீம் அப் பண்ணி ஐடியாஸ் கொடுத்தா, கொஞ்சம் கூட அவனுக்குக் கோபமோ பதட்டமோ வரதேயில்லை, எல்லாரையும் பார்த்து சிரிச்சுகிட்டே அமைதியா ஆடி ஜெயிக்கிறான், தோத்தாலும் அவன் யோசிக்கிறானே தவிரக் குறையேதும் சொல்றதில்லை, அவன் நல்லா வருவான்" என்றபோது , மகனை உச்சிமுகர்ந்து இறுக அணைத்துக்கொண்டேன்

எந்தத் தளத்திலும் பிள்ளைகள் இயங்க பெற்றோரால் அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் ஆர்வத்தையும் பொறுத்தே பாதை அமைத்துத் தர முடியும், மற்றப்படி வெற்றியும் தோல்வியும் பிள்ளைகளின் கையில்!

மகனோ மகளோ தோல்வியோ வெற்றியோ அது அவர்களின் கையில், எனினும் இரண்டையும் சரிசமமாகப் பாவிக்கும் பாங்கும், தீர்க்கமான யோசனைகளும், யாரையும் காயப்படுத்தா செயல்களும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியும் என நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோமோ அதையே பிள்ளைகள் பிரதிபலிக்கிறார்கள்

எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே.. ....நல்ல பெற்றோர்களாய் நாம் இருப்பதுதான் முக்கியம்
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!