Monday 13 July 2015

சில்லறைக் கணங்கள்

காற்றில் கலைந்த சொற்களை
நினைவில் செதுக்கியெடுத்து
விழியினின்று அகன்ற உருவை
இதயத்தினின்று தேடியெடுத்து
சிதைந்த கனவுகளை மீட்க
நான் நின்று கொண்டிருக்கிறேன் 
இந்தக் கடற்கரையோரம்
பல யுகங்களாய் - ஒரு
நங்கூரம் பாய்ச்சியக் கப்பல் போல
நீ வருவதாய்ச் சொன்ன திசைநோக்கி

கேள்வியின்றி நின்றக் கால்களை
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
தின்று ஓய்ந்து 
பின்பு  என்பு நோக்கிப் பாய்கிறது 
அவை பொடிப்பொடியாகி சிப்பிக்களாய்
மணற் வெளியெங்கும் சிதறும் வேளையில்
அலைக்கடல் அவசரமாய் ஒரு சிப்பியில்
எழுதி வைக்கும் - திரைக்கடல் கடந்து
திரவியம் தேடித் திரும்பிவரும் உன்
கால்களில் மிதிபடுபவை சிப்பிகள் அல்ல
நொந்துபோன ஓர் உயிரின்
பயனற்ற
சில்லறைச் சிதறல்களேயென்று!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!