Wednesday 4 May 2016

‎அந்நிய_தே‬(நே)சம்

பெயர் அறியா
மெல்லிய மலரொன்று
காற்றில் உதிர்ந்து தவழ்ந்தது

காற்றில் பயணித்து
கடந்துபோன சிலரின் முகம்
வருடியபோது
அது தூசியென்றானது


பூங்காவில் உலவிய குழந்தையின்
கையில் அது விளையாட்டு
தோழனானது

யாரோ ஒருவனின் காதலியின்
கன்னம் தடவிச் சென்றபோது
அது அவனின் கவிதையானது

தாவித் திரிந்த நாயின் கண்களுக்கு
அது தன்னைப்போல்
மற்றுமொரு உயிரானது

யாரின் மொழிகளிலும்
தனக்கொரு பெயரிடா
தன் தன்மையறியா
பயணிகளை விட்டு
மலர் மலராய்
அதன் பயணம் முடித்தது
ஒரு மரத்தினடியில்!

‪#‎அந்நிய_தே‬(நே)சம்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!