Wednesday 4 May 2016

கீச்சுக்கள்!

எதிர்ப்பார்ப்புகளை உடைத்துப் போட்டுவிட்டு, ஏமாற்றங்களை விழுங்கிக் கொண்டு நாம் கடந்துபோகையில், ஜென் நிலையில் இருப்பதாக மனது நினைக்க, "மாட்டிக்கிட்டான் ஏமாளி", என்று நினைக்கிறது உலகம்!

*************************

தேர்தல் பரபரப்பில், ஒருவரின் பெயரிலோ பழக்கத்திலோ, அல்லது எழுத்தின் மூலமாகவோ ஒருவரின் சாதியைப் பற்றித் தெரிந்துக் கொண்டோ, அல்லது வெளிப்படுத்திக் கொண்டோ இங்கே கூடிக்கொண்டு கொண்டாடுபவர்களும், அடுத்தவர்களை இழிவாகப் பேசுபவர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்!
இருவேறு கட்சிகளின் மீதான தங்கள் அபிமானங்களை, இங்கே சாதியத்தின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள், இதில் ஒன்றை இவர்கள் அனைவரும் மறந்துப் போகிறார்கள், அது, எந்தச் சாதியினராக இருந்தாலும், உங்கள் சாதியைக் கொண்டு நீங்கள் இங்கே போற்றிப்புகழும் தலைவர்கள் எல்லாம், தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் பொதுவானவர்களே, அந்தப் பொதுவானவர்களின் வாசல், உருகிய உங்கள் சாதியப் பாசத்துக்காக ஒருபோதும் திறக்காது, பணம் என்ற மிகப்பெரும் சாவி மட்டுமே தேவை!
ஆகையால், சாதியக் கூப்பாடுகளைத் தவிர்த்துவிட்டு, கட்சிப் பாகுபாடின்றி, தொகுதிக்கு நன்மை செய்யும் ஒருவருக்கு வாக்களியுங்கள், சிறிது ஜனநாயகம் மலரட்டும்!

************************

அரசியல் பேசாதே என்பார்கள்
அரசியல் செய்யாதே என்பார்கள்
அரசியலால் அடிமைப்பட்ட மக்கள்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!