Tuesday 27 June 2017

மூவர்ணக் கொடியும்

எல்லா துறையிலும்
ஊழல் செய்துகொண்டு
எல்லா வகையிலும் மக்களை
சிறுமைப்படுத்திக்கொண்டு
எல்லா காலத்திலும்
தண்ணீருக்காக
பிச்சையெடுத்துக்கொண்டு
எல்லா செலவினங்களிலும்
வரியென கொள்ளையடித்துக்கொண்டு
எல்லா விவரங்களையும்
தனிமனித சுதந்திரத்தையும்
ஆதார் என்று பிடுங்கிக்கொண்டு
நாள்தோறும் குற்றங்களை
நிகழவிட்டுக்கொண்டு
எதையும் மாற்றாமல்
திரையரங்கில் தேசியகீதம்
மட்டும் ஒலிக்கவிட்டு
நொந்துப்போன
அடிமை மக்களிடம்
தேசப்பற்றை வளர்க்கிறார்களாம்
மூவர்ணக் கொடியும்
வேதனையுடன் படபடத்து
பறக்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!