Tuesday 27 June 2017

மாட்டரசியல்

மாட்டரசியல் செய்துகொண்டு,
பிற மதத்தினரை
"இந்து" மதப்போர்வையில்
கொலைசெய்கிறார்கள்,
வர்ணாசிரம விதிமுறைகளில்
உழன்றுகொண்டு
சாதியின் அடிப்படையில்
கொலைசெய்கிறார்கள்,
ஜிகாத் என்று கூவிக்கொண்டு
"இஸ்லாமிய" மதப்போர்வையில்
கொலை செய்கிறார்கள்,
"கர்த்தரின் கிருபையில்"
என்று பிரார்த்திக்கும்
மேலைநாடுகளும்
கச்சா எண்ணெய்க்காக,
சர்வாதிகாரத்திற்காக
கொலை செய்கிறார்கள்
செய்யும்
எந்தக் கொலைகளிலும்
மதமில்லை
மார்க்கமில்லை
மனிதமில்லை
தனிமனித காழ்ப்பும்
பெண்களின் மீதான இச்சையும்
காசுக்கு கத்தியெடுக்கும்
குயுக்தியும் மட்டுமே
நிறைந்திருக்கிறது
அத்தனை
வெறித்தனங்களுக்கும்
மதமென்றும் சாதியென்றும்
பெயரிட்டு
அரசியல் செய்யும்
சிலரை
இந்த மதக்கடவுளர்கள்
கொன்றாலே போதும்
இந்தப் பூமி
மூச்சுவிடும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!