Tuesday 30 July 2013

நிழலற்ற அன்பு






வளர்ந்தவர்கள் குழுமி இருந்தார்கள்
குணம், நிறம், இனம், மனம் என்று
ஏதேதோ காரணிகளை நிரப்பி
சிறு குழுக்களாய் சிதறி இருந்தார்கள்

தாய் தொடர மழலையொன்று,
மலர்ந்த முகம் கொண்டு  உள்ளே வந்தது
அன்பெனும் புயல் கொண்டு
பல அற்பக் காரணிகளை - ஓர் சின்னச் 
சிரிப்பினால் சிதறடித்து சிட்டாய்ப் பறந்தது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!