Monday 29 July 2013

GIST

பிறர் புரிந்து கொள்ளாத உணர்வுகளை, உங்களுக்குள் புதைத்துக்கொள்ளுதல் நலம்!

விட்டில் பூச்சிகளைப் போன்ற வாழ்க்கையில் உனதென்ன, எனதென்ன?

-------------------------------------------------
சாதி, மத, இன உணர்வு ஜெயிக்கும் இடத்தில், அன்பு தோற்கிறது, அன்பு தோற்கும் இடத்தில் குழப்பம் விளைகிறது, குழம்பிய குட்டையில், மனித நேயம் மடிகிறது!
---------------------------------------------------------
காயப்பட்டவருக்கு மட்டுமே காயம் ஏற்படுத்திய வலி புரியும், காயம் தந்தவர்களுக்கு அது ஒரு மன்னிப்பில் ஆறி விடக் கூடிய ஒரு சிறு புண் மட்டுமே!

# வலி உணராமல் கேட்கும் மன்னிப்பு, கேட்பவருக்கு நிம்மதியையும், அளிப்பவருக்கு பெரும் வலியையுமே அளித்திடும்!

------------------------------------------------------------------
வாழும் போது ஒருவரிடம் காட்டாத பரிவை, அவர் போனபின் அழுது புரண்டு ஊர் மெச்ச ஒப்பாரி வைக்கிறோம்!
------------------------------------------------------------
அடிமைகளுக்கு உணர்வு வந்தால்
ஆள்பவருக்கு அறிவு வரும்

-----------------------------------------------------------------------------
கடைநிலை பணியில் கூட, வயது உச்சவரம்பு வைத்து, பெரியவர்களுக்கு ஒய்வு கொடுத்து மதிக்கும் சட்ட அமைப்பும், பண்பும் கொண்ட நாட்டில்............,, நிர்வாகத்தை கவனித்து, குடிமக்களை காத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நாற்காலிகளை மட்டும் இன்னமும் கொள்ளு தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறோம்!

# உழைத்து உழைத்து சோர்ந்து (சேர்த்து) கொண்டிருக்கிறது முதிய தலைமுறை! 

---------------------------------------------------------------------------
Being yourself is the greatest beauty of yours and the freedom of which is adorable as long as it doesn't interrupts or hurts others' emotions!
# You are born to live but not to burn others!

------------------------------------------------------------------------------------
எந்த ஆணுக்கும் பெண்ணின் அறிவுரை பிடித்தமானது இல்லை, அவர்கள் எதையும் அனுபவித்தே அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்! பட்டபின்பு அந்தச் சுமை குறைக்க அல்லது தாங்கிட மறுபடியும் பெண்ணைத்தான் தேடுகிறார்கள் அல்லது அந்தப் பெண்ணையே காரணமாக்குகிறார்கள்!
----------------------------------------------------------------------------------------

நம்மை நாமே தள்ளி நின்று விமர்சித்துக் கொண்டால், நமக்கு நிகழ்வது எல்லாம் ஒரு நிகழ்வாய் மட்டுமே தோன்றும்!
--------------------------------------------------------------------------        

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!