Tuesday 2 July 2013

தனிமை

காலையில் சண்டையிடும் அப்பெண்ணோ
சாலையில் உயிர் வதைத்த இவ்வாகனமோ
வாசலில் மகிழ்ச்சி குவிக்கும் அக்குருவியோ 
சன்னலில் தலை சாய்த்து கரையும் இக்காகமோ
தோளில்  தலைச்சாய்த்துப் புன்னகைத்த அம்மழலையோ
ஆவலில் சந்திக்க விழையும் இவ்வுறவோ
காண்கையில் பதைத்து விலகிய அம்மனமோ
வார்த்தையில் உதவிகள் வரையும் இவ்வுதடுகளோ?..............

காட்சியில் லயித்து - நிதம்
பாடங்கள் பயின்று - சிறிது சிரித்து,
உள்ளுக்குள் இறுகி
சிந்தையில் தெளிந்து,
வெறுமையை வெறித்து ............

ஏதுமற்ற ஓர் தனிமையில்
பல எண்ணச் சிறகுகள்  
மனம் வருடிச் சென்றது
மனித சிற்பம் வடித்தபடி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!