Friday 7 February 2014

இப்படிக்கு, காதல்

புள்ளி வைத்துக் கோலம்
போட்டாயா அல்லது
என் உயிர் வரித்தாயா?


---------------------------------------------------------
அழ வைப்பதற்கு
ஆயிரம் காரணம் கிடைக்கும்
உனக்கு,
என்னைச் சிரிக்க வைக்க
காதல் என்ற ஒற்றைக் காரணம்
போதாதா?


-----------------------------------------------------------

போய்விடு என்று சொல்லும் வேளையில்,
நான் முன்னமே மரித்துவிட்டேன் என்பதை
மட்டும் அறிக மனமே!


---------------------------------------------------------------------
தவிக்கும் போது
நீரில்லை - சேந்திட
நேரமில்லை!

மரிக்கையில்,
ஊறுமோ உன் கரங்களில்
பால்? - சொல்லடி
போகும் முன்னே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!