Sunday 16 December 2012
அன்பே சிவம்!
போதி மரத்துப் புத்தனோ
கொல்லிமலைச் சித்தனோ
எல்லாம் துறந்து நீ போக
பொம்மை ஒன்று சுழலுதடா
பம்பரமாய் உழலுதடா
நீ விட்டுச் சென்ற கடமைதனை
தட்டி முட்டிச் செய்யுதடா
விந்து தரும் செயல் தவிர்த்து
முக்தி காண வேண்டுமென்று
பக்தி மார்க்கம் செல்கின்றாய்
கைப்பற்றி வந்த வாழ்க்கைதனை
சூழ்ந்து நிற்கும் கடமைதனை
எளிதாய் உதறிச் செல்கின்றாய்
சுருங்கி விட்டது உன் மனம்
எதைச் சுருக்க இந்த ஓட்டம்
ஓடி ஒளிபவனுக்கு சிவன் எதற்கு - கடமை
தவிர்த்து வாழ சக்தி எதற்கு
செயல்கள் தானடா சிவனும் சக்தியும்
பெண்மைக்குள் வாழ்கின்றனர் அம்மையும் அப்பனும்!
பொம்மைகளால் இயங்குதடா உலகம்!
காரணம் தேடு...காரியம் தவிர்
புத்தனாய் சித்தனாய் நீ வாழ
பொம்மைகள் படைத்திடும்
காடும் வீடும்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
இருப்பதில் இருப்பதல்லவோ பக்தி. பதர்களை பாராட்டும் பதர்களால் பக்தியும் பாழாகிப் போனது....
ReplyDelete