Wednesday 16 September 2015

வரைமுறை!

காம்பைக் கிள்ளி,
செடி கண்ணீர் விடுவதை
நீங்கள்
பூவைக் கிள்ளுகையில்
தெறித்த பன்னீர்த் துளி
என்று கவிதையாகச்
சொல்லலாம்,

 ஏதோ ஒரு வன்மத்தின்
 வடிகாலாக
 ஒரு குழந்தையைத் துன்புறுத்தி
 அழவைத்ததை,
 என் மிதமிஞ்சிய அன்பினால்
 ஏற்பட்ட கோபமது என்று
 பின்னாளில் நீங்கள்
 சமாதானமும் செய்யலாம்

வன்முறைக்கில்லையே
வரைமுறை! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!