Wednesday, 1 June 2016

அன்பளிப்பு

இந்த அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும்போது செலுத்த வேண்டிய சில கட்டணத் தொகைகளை, வங்கிக் காசோலை எடுத்துச் செலுத்துவது போல, இந்தக் காஸ் சிலிண்டர்களுக்கும் வங்கியிலேயே பணத்தைச் செலுத்தும் முறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும், கீழ் விட்டுக்கு 25 ரூபாய் அதிகம், முதல் மாடிக்கு நூறு ரூபாய் அதிகம் என்று மாடிக்கு மாடி அன்பளிப்பு என்ற பெயரில் பில்லில் உள்ள தொகைக்கும் மேலே அதிகம் கேட்கிறார்கள்! எங்கள் குடியிருப்பில் 21 வீடுகள், ஒரு வீட்டுக்கு அதிகபட்சம் நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு குடியிருப்பில் அவர்களுக்கும் கிடைக்கும் தொகை 2100/- ரூபாய், இதுபோல ஒரு தெருவில் இருபக்கமும் சேர்த்து 30 வீடுகள், ஒரு தெருவில், ஒரு வேளை வந்து சப்ளை செய்வதற்கு, அவர்கள் மக்களிடம் இருந்து பிடுங்கும் பணம் 63000/- ரூபாய்! (இது அவர்களின் சம்பளம் தவிர்த்து வரும் உபரி வருமானம்)
இதுபோல ஓர் ஏரியாவில் எத்தனை தெருக்கள்? கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!
யாரோ விரும்பிக் கொடுக்கும் அன்பளிப்புக் காலபோக்கில் கட்டாயக் கையூட்டு என்று ஆகிவிடுகிறது எல்லாத் துறைகளிலும்! இதையெல்லாம் டிஜிட்டல் மாயம் என்று மாற்றக் கூடாதா?
மக்களுக்காக வாழும் முதல்வரின் கவனத்துக்கு! மக்களுக்காகவே வரைபடங்களில் உள்ள நாடுகளில் உலா வந்து கொண்டிருக்கும் பிரதமரின் கவனத்துக்கு!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...