Wednesday 1 June 2016

கீச்சுக்கள்!

கொடுக்கும் இலவசங்களை வாங்கிக் கொண்டே இருங்கள், பிற்காலத்தில் நம் தலையில் ஏற்றிவிட்ட பெரும் கடன்தொகைக்காக, ஏதோ ஒரு முதலாளியோ நாடோ நம்மை நாய் வண்டியில் பிடித்துப் போனால் அதிர்ச்சியடையாதீர்கள்!!!


அன்பில் வேதனைக் கண்ணீர் இல்லை
கண்ணீர் தரும் அன்பிலும் உண்மையில்லை!



காரியத்துக்காக வரும் நட்பு
காரியத்துடன் கரைந்து விடும்!


திருமணமாகாத தோழனுடன் வெளியே செல்வது பூனைக்குட்டியை மடியில் கட்டிக்கொண்டுப் போவது போல, அதுவும் விடியற்காலையில் அவனுடன் ஜிம்மிற்கு செல்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றது!
பயபுள்ள ஒரு பொண்ணு விடாம பாக்குது, ஒபினியன் கேட்டு என் மண்டைக்கும் வேட்டு வைக்குது! 😳

சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில், லாயிட்ஸ் ரோட்டில்
ஒரு கல்யாண மண்டபத்தில் 5000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது, சாலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஆமாம் அப்படியேத்தான், சாலையைக் கடக்க முடியாத அளவிற்கு நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்கள் அன்புத் தொண்டர்கள், இன்னும் பேரன்புடன் பல தொண்டர்கள், நாங்கள் பிரியாணி சாப்பிடும் வரை மக்கள் வீட்டை விட்டே வெளியே வர வேண்டாமென்று ஒரு வீடு விடாமல் எல்லோர் வீட்டு வாசலிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து அட்டகாசம் செய்துக் கொண்டிருக்கின்றனர்! ஒரே ஒரு காவல்துறை அதிகாரி அவர்களிடம் போக்குவரத்தை சரி செய்ய அல்லாடிக் கொண்டிருக்கிறார்!
இதுவரை ஆளுங்கட்சி வாசலை அடைத்ததில்லை, இப்போது எதிர்கட்சித் தொண்டர்கள்
மக்களுக்கு எதிரான கட்சிப்போல களப்பணியாற்றுகிறார்கள்!
என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா!?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!