Wednesday 1 June 2016

வஞ்சனை!



ஓடும் நதிபோல் ஓடிக்கொண்டே
இருக்கலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் தாகம் தீர்த்துக் கொள்வார்கள்

கனிகளைக் கொண்டு இருக்கும்
மரம் போல்
நின்றுகொள்ளலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் பசித் தீர்த்துக் கொள்வார்கள்

செழித்த மண்ணைப் போல்
வளம் தரலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள் விதைத்து
அறுவடை செய்து கொள்வார்கள்

ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களாய்
வளர்ந்து நிற்கலாம்
தேவைப்படும்போது
மனிதர்கள்
வளங்களை உறிஞ்சிக் கொள்வார்கள்

ஒருக்காலும் மனிதர்களாய்
மட்டும் நின்றுவிடாதீர்கள்
எடுப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்ட
குலத்திற்குக் கொடுப்பதற்கு
என்ன இருக்கிறது,
செயலற்ற கருணையைத் தவிர?!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!